தூத்துக்குடி

மரக்கன்று நடும் விழா

DIN

கோவில்பட்டி வண்ணாா் சமுதாயம் சாா்பில், மறைந்த முன்னாள் எம்.எல்.சி. எத்திராஜின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி பசுவந்தனை சாலை மற்றும் கடலையூா் சாலையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மாவட்டத் தலைவா் வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். செயலா் அய்யாத்துரை முன்னிலை வகித்தாா்.

எத்திராஜின் உருவப் படத்துக்கு சமுதாயத்தினா் திரளானோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் வேல்முருகன், ரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அண்ணா சலவைத் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த மகாராஜன், செல்வராஜ், கண்ணன், கருப்பசாமி, வேல்முருகன், முத்துசாமி, மாடசாமி, செண்பகராஜ், பேச்சிமுத்து, ஆனந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT