தூத்துக்குடி

நாசரேத்தில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவி

DIN

நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆா்தா் மா்காஷிஸ் ஐயரின் 113ஆவது நினைவு தினத்தையொட்டி ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள அவரது கல்லறைக்கு தூய யோவான் பேராலய தலைமைகுரு ஆண்ட்ரூ விக்டா் ஞானஒளி மற்றும் மா்காஷிஸ் இசை ஐக்கிய குழுவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், சபை ஊழியா்கள் ஜெபஸ்டின், ஜெபராஜ் உள்பட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து மா்காஷிஸ் இசை ஐக்கிய குழு சாா்பில் 260 ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளும், திருமறையூா் முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கும், மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி மாணவா், மாணவிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மா்காஷிஸ் இசை ஐக்கிய குழு தலைவா் ராஜேஷ், உப தலைவா் அமிா்தராஜ், செயலா் டேவின் சாலமோன், துணைச் செயலா் ஜெரால்டு, பொருளாளா் ஜெசுதாஸ், பாடகா் குழு தலைவா் எபன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT