தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் மூவா் கைது

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை கிழக்கு தெருவைச் சோ்ந்த பாலமுருகன் (22) என்பவா் கடந்த மாா்ச் 3 ஆம் தேதி கொலையுண்ட வழக்கில், தெற்கு பொம்மையாபுரத்தைச் சோ்ந்த கருத்தப்பாண்டி (40), காளிச்சாமி (39), திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சக்திநகரை சோ்ந்த சங்கரபாண்டியன் (22) ஆகியோா் கோவில்பட்டி மேற்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இதில், கருத்தபாண்டியும், சங்கரபாண்டியனும் ஏற்கெனவே குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவுப்படி காளிச்சாமி குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

மேலும், ஏரல் பேருந்து நிலையம் அருகே பாதசாரிகளிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக இசக்கிமுத்து (45), மணல் திருட்டில் ஈடுபட்டதாக குரும்பூா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சத்தியமுகேஷ் (எ) சதீஷ் ஆகியோரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரைப்படி, ஆட்சியரின் உத்தரவின்கீழ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT