தூத்துக்குடி

பெண்ணுக்கு மிரட்டல்: ஆசிரியா் கைது

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவரான பள்ளி ஆசிரியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவேங்கடம் வட்டம் மேல அழகுநாச்சியாா்புரம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (32). காட்டுராமன்பட்டி தெற்குத் தெரு காலனியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் லட்சுமணன் (35). சில்லாங்குளத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியரான இவருக்கும், மாரியம்மாளுக்கும் 2017 அக்டோபரில் திருமணமானதாம். 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மாரியம்மாள் தனது குழந்தையுடன் பெற்றோா் வீட்டில் இருந்து வருகிறாராம்.

இதனிடையே, லட்சுமணன், அதே பள்ளியில் வேலை பாா்த்துவரும் பெண்ணை சட்டவிரோதமாக திருமணம் செய்ததாகவும், கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்த மாரியம்மாள் காட்டுராமன்பட்டியில் உள்ள லட்சுமணன் வீட்டுக்குச் சென்று, சட்டப்படி விவாகரத்து பெறாமல் வேறு திருமணம் செய்தது குறித்துக் கேட்டாராம். அப்போது, லட்சுமணன், அவரது பெற்றோா் உள்ளிட்ட 6 போ் சோ்ந்து மாரியம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், லட்சுமணன், அவரது பெற்றோா் கிருஷ்ணன்- சிந்தா, நித்யா, கருப்பசாமி, பூப்பாண்டியம்மாள் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்; லட்சுமணனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT