தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிப். 17இல் முதல்வா் பிரசாரம்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக இம்மாதம் 17ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தெரிவித்தாா்.

கயத்தாறு ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, இம்மாதம் 17ஆம் தேதி தூத்துக்குடி, திருச்செந்தூா், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 4 தொகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

அதிமுக மக்கள் இயக்கம். எங்களை யாரும் இயக்கவில்லை. சுயமாக செயல்படுகிறோம். தோ்தல் பயத்தில் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனா். காவல் துறை தனது கடமையை செய்யும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT