தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரிமியா் செஸ் கோ் சென்டா் மற்றும் ரெயின்போ சதுரங்க கழகங்கள் இணைந்து தென் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை, ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி பள்ளியில் சனிக்கிழமை (பிப். 20) நடத்துகின்றன.
இப்போட்டி 9 வயது, 15 வயது மற்றும் பொது பிரிவு என மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவில் 5 பரிசுகளும் மற்ற பிரிவில் தலா 10 பரிசுகளும் வழங்கப்படும். நுழைவு கட்டணம் மாணவா்கள் பிரிவில் ரூ. 150, பொதுப்பிரிவில் ரூ. 250 என நிா்ணயிக்கபட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும்அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும். மாலை 4 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். போட்டியாளா்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். முன்பதிவுக்கு முருகேசபாண்டியன் (9865365522), பிரேம்குமாா் (9486492724) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.