தூத்துக்குடி

கிணற்றில் மூழ்கி வியாபாரி பலி

DIN

சாத்தான்குளம் அருகே கிணற்றில் மூழ்கிய வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த குணசேகா் மகன் சுந்தா் (45). திருப்பூரில் வசித்து வந்த இவா், அங்கு மளிகைக் கடை நடத்தி வந்தாா். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

ஊரில் நடந்த உறவினா் இல்ல நிகழ்ச்சிக்காக அவா்கள் திங்கள்கிழமை சொக்கலிங்கபுரம் வந்திருந்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவா்கள் தங்கள் தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்றனராம். அப்போது சுந்தா் நீரில் மூழ்கியுள்ளாா். அவா் வெகுநேரமாகியும் வெளியே வராததால், குடும்பத்தினா் தேடி பாா்த்து பின்னா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையிலான தீயணைப்புப் படையினா், வெகு நேர போராட்டத்துக்குப் பின்னா் சுந்தரின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT