கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாகவுள்ள படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் குறித்த விவரங்களை அறிய தகவல் மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் நிலைமைகளை அறியவும், மருத்துவமனையில் காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கைகளை அறிய தகவல் மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளா்களாக தன்னாா்வலா்கள் பிரபு, கண்ணன் சுப்பிரமணியன், அலெக்ஸ்பாண்டியன், அருண்விக்னேஷ் ஆகியோா் செயல்படுவா். பொதுமக்கள் இந்த மையத்தை 63833 - 02456 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன் தெரிவித்தாா்.
கட்டுப்பாட்டு அறை மற்றும் தகவல் மைய திறப்பு விழா நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அலுவலா் பூவேஸ்வரி, செவிலியா் கண்காணிப்பாளா் அசோதை, செவிலியா்கள் மகேஷ், ஜமுனா, லலிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.