தூத்துக்குடி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

DIN

கயத்தாறு அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கயத்தாறு அருகே 16 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோா் கயத்தாறு போலீஸில் புகாா் அளித்தனா். இது குறித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அச்சிறுமியை அய்யனாா்ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் கருப்பட்டி வியாபாரி பொன்னுச்சாமி (19) கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பொன்னுச்சாமியை கைது செய்தனா்.

மற்றொருவா் கைது: கோவில்பட்டி தெற்கு பஜாா் காங்கேயன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா மகன் கோபிநாத் (35). இவா் தனது மோட்டாா் சைக்கிளை அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் முன்பு நிறுத்தி இருந்தார்.

பின்னா் வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிளை எட்டயபுரம் வளைவு ரோட்டைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் பாலசுப்பிரமணியன் (35), கட்டையால் சேதபடுத்திக் கொண்டிருந்தாராம். புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT