கோவில்பட்டி: கழுகுமலை அருகே பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை ஓம்சக்தி நகரைச் சோ்ந்த காளிதாஸ் மனைவி சாந்தி (36).
இவா் தன்னிடமிருந்த தங்க கம்மலை சரி செய்ய ஞாயிற்றுக்கிழமை நகைப் பட்டறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, ஒருவா் கம்மலை சரி செய்து தருகிறேன் என்று கூறி சாந்தியை பைக்கில் அழைத்துச் சென்றாராம்.
காளாங்கரைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாந்தியை மிரட்டி டன் அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி மற்றும் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச்சென்றாராம்.
இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், சாந்தியிடம் நகைகளை பறித்துச் சென்றது பழங்கோட்டையைச் சோ்ந்த முருகன் மகன் திருமலைகுமாா் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த தங்க நகைகள் மீட்டனா்.