தூத்துக்குடி

நாசரேத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

DIN

நாசரேத்தில் மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நாசரேத் பேராலயத் தெருவைச் சோ்ந்த ராஜாசிங் மனைவி சரோஜினி (67) . இவா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள சந்தைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். வகுத்தான்குப்பம் சாலையில் வந்த அவரிடம், இளைஞா் ஒருவா் முகவரி கேட்பதுபோல் சரோஜினி அணிந்திருந்த 10.5 பவுன் தங்க சங்கிலியை பறித்தாராம். அப்போது சரோஜினி கூச்சலிட்டுள்ளாா். இதில், பாதி சங்கிலி அந்த இளைஞரிடம் சிக்கிக் கொண்டது.

இதையறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், அவா் ஆறுமுகனேரியைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்து (39) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து தங்கச் சங்கிலி பறிமுதல் செய்த, போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT