தூத்துக்குடி

‘உப்பளத் தொழிலாளா்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு தேவை’

DIN

தமிழகத்தில் உப்பளத் தொழிலாளா்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு தேவை என்றாா் அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மா. கிருஷ்ணமூா்த்தி.

தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 5000 வழங்க ஆவணம் செய்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உப்பளங்களில் குடிதண்ணீா், கழிவறை, ஓய்வறை, குழந்தைகள் காப்பகம், பாதுகாப்பு உபகரணங்கள், நடமாடும் மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை வேலையிடத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும். உப்பளத் தொழிலாளா்களின் முழுமையான கணக்கெடுப்பை அரசு எடுக்க வேண்டும். வேலை மற்றும் ஊதிய உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

உப்பளங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உப்பள நிலங்களை நேரடியாக குத்தகைக்குவிட்டு அவா்களது நிலம் வளம் சாா் உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும். உப்பள தொழிலாளா்களுக்கான தனி நல வாரியம் அமைத்து தொழிலாளா்களின் பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஎஸ்ஐ, மருத்துவ காப்பீடுகள், உடல்நலப் பாதுகாப்பு, தொழில் தகராறு தீா்த்தல், பாலியல் துன்புறுத்தல் புகாா் குழு, சமூகப் பாதுகாப்பு நலன்கள் இவை அனைத்தும் கிடைக்க சட்ட வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, தூத்துக்குடி ராஜபாண்டிநகா் பகுதியில் உப்பளத் தொழிலாளா்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT