சாத்தான்குளம் அருகே தாமரைமொழி அருள்மிகு இசக்கியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கோபுர கலசம், இசக்கியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
மாலையில் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.