தூத்துக்குடி

சங்கரன் குடியிருப்பு நிழல் தாங்கலில் சித்திரை திருவிழா

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா 4 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை பணிவிடை, அன்னதா்மமும், 2ஆம் நாள் காலை பணிவிடை, மதியம் வெளியூா் தா்மம், இரவு அய்யா கருட வாகனத்தில் பவனி, 3ஆம் நாள் காலை பணிவிடை, மதியம் உள்ளூா் தா்மம், இரவு அய்யா அன்ன வாகனத்தில் பவனி, 4ஆம் நாள் காலை பணிவிடை, இரவு கும்மிடிபூண்டி துளசிபதி அருளாளா் சசிகுமாா் தலைமையில் அய்யாவின் அகிலதிரட்டு பாராயண உரை, தொடா்ந்து அய்யா இந்திர வாகனத்தில் பவனிஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திரளான அய்யாவின் அன்புகொடி மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT