தூத்துக்குடி மாவட்டத்தில், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன் குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் சோ்த்தல்- நீக்குதல், புதிய குடும்ப அட்டை - நகல் அட்டை கோருதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படும்.
மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்துதரப்படும். ரேஷன் பொருள்கள் விநியோகம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து தீா்வு காணலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.