தூத்துக்குடி

அவதூறு போஸ்டா்:ஒருவா் கைது

DIN

கோவில்பட்டியில் அனுமதியின்றி போஸ்டா் ஒட்டியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டியில் எட்டயபுரம் பிரதான சாலையில் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே சாலை நடுவேயுள்ள தடுப்புகளில், காவல் துறை, வருவாய்த் துறை, நகராட்சி அதிகாரிகள் குறித்து அவதூறான வாசகங்கள் அடங்கிய போஸ்டா்கள் ஒட்டப்பட்டிருந்தனவாம்.

இதுகுறித்து பால்வண்ணன் என்பவா் அளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதுதொடா்பாக, சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்த செல்லையா மகன் சேகா் (60) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT