தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரத்ததான முகாம்

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை மற்றும் அக்னி சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன் தலைமை வகித்தாா். உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் அமுதா முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவா் லட்சுமி சித்ரா தலைமையில் செவிலியா்கள் கண்ணகி, சுபா, ராஜேஸ்வரி, முத்துலட்சுமி ஆகியோா் குழுவினா் முகாமில் பங்கேற்ற 35 பேரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனா்.

தொடா்ந்து செமபுதூரில் சுமாா் 1,000 மரக்கன்றுகள் நட்டி பராமரித்து வந்த பசுமை இயக்கத்தைச் சோ்ந்த தங்கமாரியப்பனுக்கு பசுமை நாயகன் கேடயம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT