தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் தீா்த்தவாரி

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த இத்திருக்கோயிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 26ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரி காலை, இரவு சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.

பத்தாம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சுவாமி - அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது. காலை 10.35 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல் மற்றும் தீா்த்தவாரி அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT