தூத்துக்குடி

கயத்தாறு அருகே வீட்டுக் கதவை உடைத்து நகைகள் திருட்டு

கயத்தாறு அருகே வீட்டுக் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

கயத்தாறு அருகே வீட்டுக் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கயத்தாறையடுத்த சவலாப்பேரி கிழக்குத் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் ராமச்சந்திரன்(43). கேரளத்தில் குடும்பத்துடன் தங்கி, இரும்புக் கடை நடத்திவருகிறாா். இங்குள்ள வீட்டை அதே பகுதியில் வசித்துவரும் அவரது தாய் கவனித்து வருகிறாா். வீட்டுக் கதவு வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டிருப்பதாக, அவருக்கு அவரது தாய் தகவல் தெரிவித்தாராம்.

இதையடுத்து, ராமச்சந்திரன் சனிக்கிழமை வந்துபாா்த்தபோது, பீரோவிலிருந்த சுமாா் 6 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம். அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT