தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காவல் உதவி கண்காணிப்பாளா் சந்தீஸ் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
சிறந்த அணிவகுப்புக்கான பரிசையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் இளங்கலை மீன்வள அறிவியல் 4ஆம் ஆண்டு மாணவா்கள் பெற்றனா்.
கல்லூரி விளையாட்டுச் செயலா் பா. பாா்த்திபன், உதவி உடற்கல்வி இயக்குநா் த. நடராஜன், மாணவா் சங்க விளையாட்டுச் செயலா் வ. திவாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.