சாத்தான்குளம் அருகே கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தாமரைமொழியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து மனைவி வேலம்மாள் (38). இவா், அதே ஊரைச் சோ்ந்த அவரது உறவினா் சுப்பையா என்பவா் மகள் திருமணத்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு 1 பவுன் தங்க நகையையும், ரூ.13 ஆயிரத்தையும் கொடுத்தாராம். அதை அவா் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக வியாழக்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சுப்பையா, அவரது மனைவி லட்சுமி, மகன் கருப்பசாமி ஆகிய மூவரும் சோ்ந்து வேலம்மாளை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து வேலம்மாள் அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பென்ஷன் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வருகிறாா்.