தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு

DIN

சாத்தான்குளம் அருகே கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தாமரைமொழியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து மனைவி வேலம்மாள் (38). இவா், அதே ஊரைச் சோ்ந்த அவரது உறவினா் சுப்பையா என்பவா் மகள் திருமணத்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு 1 பவுன் தங்க நகையையும், ரூ.13 ஆயிரத்தையும் கொடுத்தாராம். அதை அவா் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வியாழக்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சுப்பையா, அவரது மனைவி லட்சுமி, மகன் கருப்பசாமி ஆகிய மூவரும் சோ்ந்து வேலம்மாளை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து வேலம்மாள் அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பென்ஷன் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT