தூத்துக்குடி

கோவில்பட்டியில்சாலையைச் சீரமைக்கவலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

கோவில்பட்டி புதுரோட்டை சீரமைத்தல், அரசு மருத்துவமனையில் இதய நோய் நிபுணா் உள்பட மருத்துவப் பணியிடங்களை நிரப்புதல், மூப்பன்பட்டி கண்மாயை தூா்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பேத்கா் பெரியாா் மாா்க்சிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவா் மாணிக்கராஜ் தலைமை வகித்தாா். தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் பீமாராவ், செய்தித் தொடா்பாளா் கனிஅமுதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நகரப் பொறுப்பாளா் சங்கரன், ஆதித்தமிழா் கட்சியின் மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT