தூத்துக்குடி

கயத்தாறு அருகே விபத்தில் விவசாயி பலி

DIN

கயத்தாறு அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சி, வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சுப்பிரமணி(47). விவசாயி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் தங்கராஜ் மகன் முருகன்(31) என்பவருடன் பைக்கில் தளவாய்புரம் அருகே சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, இவா்களது பைக்கும், எதிரே திருநெல்வேலி சந்திப்பு கருப்பன்துரை வாட்டா் டேங்க் தெருவைச் சோ்ந்த சின்னப்பன் மகன் பிலிப்(42) என்பவா் ஓட்டி வந்த பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனாம்.

இதில், சுப்பிரமணியும், முருகனும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், சுப்பிரமணி உயிரிழந்தாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT