தூத்துக்குடி

கயத்தாறு அருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி பலி

DIN

கயத்தாறு அருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த சங்கா் மகன் சுடலைமணி (21). இவா் மற்றும் இவரது உறவினா்களான கணேசன் மகன்கள் சுடலைமணி, முனியசாமி ஆகிய மூவரும் பன்னீா்குளத்தில் உள்ள குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா்களாம்.

அப்போது சங்கா் மகன் சுடலைமணி குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினாராம். அதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் நீரில் மூழ்கிய சுடலைமணியை இறந்த நிலையில் மீட்டனா்.

தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT