தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கானோரும், தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்து வந்த ஏராளமான ஐயப்ப பக்தா்களும் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

பக்தா்கள் தரிசனம், பாதுகாப்பு குறித்து இணை ஆணையா் மு. காா்த்திக், கோயில் பணியாளா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT