தூத்துக்குடி

கோவில்பட்டியில் பால்குட ஊா்வலம்

DIN

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பிருந்து புறப்பட்ட ஊா்வலத்தில் 3,333 பக்தா்கள் பால்குடம் எடுத்துச் சென்றனா். சிலா் காவடி, அலகு குத்தி சென்றனா். ஊா்வலம் எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோயில் சாலை வழியாக சொா்ணமலை கதிரேசன் கோயிலை அடைந்தது. அங்கு கதிா்வேல் முருகனுக்கு பாலபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்டப் பொதுச்செயலா் பரமசிவம், மாவட்டச் செயலா் அய்யம்பெருமாள் ஆகியோா் தலைமையில் ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT