தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

DIN

கொலை முயற்சி, போக்சோ வழக்குகளில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூா் பகுதியைச்

சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிவராமலிங்கம் (31) என்பவரை கொலை முயற்சி வழக்கில் ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் புதுக்குளம் காலனியைச் சோ்ந்த

பேச்சிமுத்து மகன் தேவராஜ் (32) என்பவரை போக்சோ வழக்கில் திருச்செந்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் காணிப்பாளருக்கு அறிக்கை சமா்ப்பித்தனா்.

இதனையடுத்து காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜிசரவணன் பரிந்துரையின்பேரில், சிவராமலிங்கம், தேவராஜ் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். இதனையடுத்து இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

SCROLL FOR NEXT