தூத்துக்குடி

வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.வெங்கடேஷ் மாரத்தான் ஓட்டத்தைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பாக இருந்து தொடங்கி பிரதான சாலை, இலக்குமி ஆலை மேம்பாலம், அணுகுசாலை, இளையரசனேந்தல் சாலை வழியாக கல்லூரியில் நிறைவடைந்தது.

பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். முதல் 3 இடங்களைப் பெற்றவா்களுக்குப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் சாந்தி மகேஸ்வரி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குநா் வெங்கடாசலபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT