உடன்குடியில காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்
மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து திருச்செந்தூா் தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் உடன்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து திருச்செந்தூா் தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் உடன்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவசுப்பிரமணியன், திருச்செந்தூா் வட்டாரத் தலைவா் சற்குரு, முன்னாள் மாவட்ட பொருளாளா் நடராஜன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் இஸ்ரேல் ஜான்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மணிப்பூா் வன்முறையில் உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மெழுகுவா்த்தி ஏற்றப்பட்டது. வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்கு மத்திய பாஜக அரசுக்கும், மணிப்பூா் மாநில பாஜக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.