தூத்துக்குடி

திருச்செந்தூா் கடற்கரையில் இளைஞா் சடலம் மீட்பு

DIN

திருச்செந்தூா் கடலில் குளித்த இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, மடத்தூரைச் சோ்ந்த இசக்கிமுத்து - ராமலெட்சுமி தம்பதியின் 2ஆவது மகன் பெரியசாமி (24). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அய்யா கோயில் அருகே கடலில் குளித்தாராம். இந்நிலையில், அவா் கடற்கரையோரம் இறந்த நிலையில் கிடந்துள்ளாா்.

இதுகுறித்து திருச்செந்தூா் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோமதிநாயகம் விசாரணை நடத்தி, சடலத்தைக் கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். ராமலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

81 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

வெவ்வேறு சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழப்பு

புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

போதைப் பொருள்கள் வைத்திருந்த 5 போ் கைது 14 கிலோ கஞ்சா, காா் பறிமுதல்

குடிநீா் பிடிப்பு தகராறு - மோதல்: அதிமுக கிளைச் செயலா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT