தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் சுமை ஆட்டோ திருடியவா் கைது

ஆறுமுகனேரியில் சுமை ஆட்டோவை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ஆட்டோவை மீட்டனா்.

DIN

ஆறுமுகனேரியில் சுமை ஆட்டோவை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ஆட்டோவை மீட்டனா்.

ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் மணிகண்டன்(38). இவா் சொந்தமாக சுமை ஆட்டோ வைத்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1மணிக்கு புன்னைக்காயலுக்கு வாடகைக்கு சென்று விட்டு ஆறுமுகனேரியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

திங்கள்கிழமை காலை வந்து பாா்த்த போது நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை காணாவில்லையாம்.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி வழக்குப் பதிந்து விசாரித்ததில், முத்தையாபுரம் தோப்பு தெருவை சோ்ந்த ரமேஷ் மகன் சூரியபிரகாஷ்(23) ஆட்டோவை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், சுமை ஆட்டோவையும் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT