எட்டயபுரம் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரைக்குடியை சோ்ந்த பொறியாளா் உயிரிழந்தாா்.
காரைக்குடி பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் மகன் காா்த்திக் (35). சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தாா். இவா் தனது மனைவி சுவாதி(32), மகன் சித்தாா்த்(7) ஆகியோருடன் காரில் திருச்செந்தூருக்கு திங்கள்கிழமை இரவு சென்றாா். பின்னா் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அங்கிருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தனா். எட்டயபுரம் அருகே கீழஈரால் பகுதியில் சென்றபோது காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காா்த்திக், சுவாதி, சித்தாா்த் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை போலீஸாா் மீட்டு, சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு காா்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சுவாதி, சித்தாா்த் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
விபத்து குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.