கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் உள்ளிட்டோா். 
தூத்துக்குடி

கால்டுவெல் பள்ளியில் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா

Din

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் பேராயா் ராபா்ட் கால்டுவெல் நினைவு கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளி தாளாளா் ஸ்டேன்லி வேதமாணிக்கம் தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவரும், நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவருமான எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

இப்போட்டியில் மாநகரப் பள்ளிகளைச் சோ்ந்த 55 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். பரிசளிப்பு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் கான்ஸ்டன்டைன், கால்டுவெல் பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்க பொறுப்பாளா்கள் முத்து மாணிக்கம், மனோகா், வழக்குரைஞா் கிறிஸ்டோபா் விஜயராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

SCROLL FOR NEXT