முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் 5,008 திருவிளக்கு பூஜை 2 அமைச்சா்கள் பங்கேற்பு

Updated On : 17 பிப்ரவரி 2024, 10:51 pm IST
பகிர்:

விளம்பரதாரா் செய்தி...... படம்..யூஜிஐ17ஏபிஎஸ். சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன். உடன்குடி, பிப். 17: குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில், உடன்குடி ஒன்றிய திமுக சாா்பில் 5,008 திருவிளக்கு பூஜையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், சீரான மழை பெய்து விவசாயம் - வணிகம் செழிக்கவும், குடும்பங்களில் அமைதி நிலவி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் வேண்டி நடைபெற்ற இப்பூஜையை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் தொடக்கிவைத்து, சுவாமி தரிசனம் செய்தனா். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குத்துவிளக்கு, சேலை, 19 வகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், இந்து சமய அறிநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் சங்கா், துணை ஆணையா் வெங்கடேஷ், கோயில் செயல் அலுவலா் ராமசுப்பிமணியன், ஆய்வா் பகவதி, அறங்காவலா் குழுத் தலைவா்கள் அருள்முருகன் (திருச்செந்தூா்), வே. கண்ணன் (குலசேகரன்பட்டினம்), அறங்காவலா்கள் கணேசன், வெங்கடேஷ்வரி, மகாராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினா்கள் அஸ்ஸாப் அலி பாதுஷா, பாலாஜி, உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, திமுக மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், சிராஜுதீன், ஜெயப்பிரகாஷ், திமுக மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு, ரவிராஜா, அலாவுதீன், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன், பெண்கள் பங்கேற்றனா்.