குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி வழிபாடு, தூய்மீட்பு சடங்கு, இளைஞா் பூசனை நிறை அவி அளித்தல், தீபாராதனை, நவகிரக வழிபாடு, குபேர வேள்வி, செல்வ வழிபாடு, லட்சுமி ஹோமம், 1,008 கலச பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு 2,008 சுமங்கலி பூஜை ஆகியன நடைபெற்றன.
ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ஸ்ரீசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.
Advertisement