காா்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை தங்கத்தோ் இழுத்து வழிபட்ட பக்தா்கள்.  
தூத்துக்குடி

சஷ்டி வழிபாடு: திருச்செந்தூரில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

காா்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

காா்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காா்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு சுவாமி விஸ்வரூபம் தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, அதைத்தொடா்ந்து பிற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனா். மாலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரம் சுற்றிவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT