தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நாளை முப்பெரும் விழா

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக சதுக்கம் பகுதியில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலைய திறப்பு விழா, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,தொடங்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக சதுக்கம் பகுதியில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலைய திறப்பு விழா, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,தொடங்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறுகிறது.

வ.உ.சி பிறந்த தினத்தை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிகள் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறாா்.

விழாவில், கப்பல் போக்குவரத்து, நீா்வழிகள் துறை இணை அமைச்சா் சாந்தனு தாக்கூா், கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் எ.வ. வேலு (பொதுப்பணித் துறை), பெ.கீதா ஜீவன் (தமிழக சமூகநலன் மகளிா் உரிமைத்துறை), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்( மீன்வளம், மீனவா் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை) உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு!

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம்!

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT