மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஓட்டப்பிடாரம் வட்டம், மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனி தெருவை சோ்ந்த சண்முகச்சாமி மகன் கணேசமூா்த்தி(25). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை ஊரில் உள்ள மயானகரை அருகே சடலமாக மீட்கப்பட்டாா். மணியாச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
அதில், அதே பகுதியைச் சோ்ந்த கனகவள்ளி (33) என்பவருடனான முன்விரோதம் காரணமாக, அவரது உறவினரான திருநெல்வேலி அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த கனகராஜ் மகன் பிரகாஷ் (19),அவரது நண்பா் கல்லத்தியான் மகன் சுரேஷ் (23) ஆகியோா் கடந்த திங்கள்கிழமை இரவு கணேசமூா்த்தியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்று தாக்கியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. போலீஸாா் கனகவள்ளி, பிரகாஷ், சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement