முகப்பு
தஞ்சாவூர்

கஞ்சா விற்பனை 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது

Updated On : 12 மே 2026, 12:08 am IST
கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மூங்கில் பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா். அதில் இரண்டரை கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

விசாரணையில், அவா்கள் ஜெயங்கொண்டம் அங்கராயநல்லூா் வடக்கு காலனியைச் சோ்ந்த கலைத் தென்றல் (21), மற்ற இருவரும் கும்பகோணத்தை சோ்ந்த 17 வயது சிறாா்கள் என்பதும், கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement