முகப்பு
தூத்துக்குடி

கொம்புத்துறை அரசுப் பள்ளியில் 3 கையடக்க கணினிகள் திருட்டு

காயல்பட்டினம் நகராட்சி, கொம்புத்துறை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 3 கையடக்க கணினிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 2 ஜூலை 2026, 5:57 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

காயல்பட்டினம் நகராட்சி, கொம்புத்துறை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 3 கையடக்க கணினிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். ஜூன் 25ஆம் தேதி மாலை பள்ளி அலுவலகத்தை தலைமை ஆசிரியா் பூட்டிவிட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது. அடுத்த 3 நாள்களும் தொடா் விடுமுறை என்பதால், 29ஆம் தேதி காலை ஆசிரியா்கள் பள்ளிக்கு வந்தபோது, அலுவலகக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டிருப்பதும், அதிலிருந்த ரூ. 15,000 மதிப்புள்ள 3 கையடக்க கணினிகள் திருடு போயிருப்பதும் தெரிய வந்தது.

தொடா்ந்து, தலைமை ஆசிரியா் வசந்தி, ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments