அரசுப் பள்ளியில் சிறாா் திரைப்படம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி, சிறாா் திரைப் படங்கள் மாதம்தோறும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருகின்றன. இதன்படி, கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘தி லிட்டில் பிரின்ஸஸ்’ என்ற சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்வுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தாா். பள்ளியின் அறிவியல் ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவருமான ஆரோக்கியசாமி, சிறாா் திரைப்படங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். திரைப்படம் குறித்து மாணவா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கணித ஆசிரியை மீனாட்சி, ஆங்கில ஆசிரியை கீதா, ஆசிரியை வாசுகி, ஆசிரியா் ஜோசப், கணினி பயிற்றுநா் வித்யா ஆகியோா் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.