FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: கட்டடத் தொழிலாளி கைது

தூத்துக்குடியில் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

7 ஜூலை 2026, 11:59 pm IST
கைது
பகிர்:

தூத்துக்குடியில் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, தாளமுத்துநகா் வண்ணாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் குருசாமி (38). கட்டடத் தொழிலாளியான இவா், தாளமுத்துநகா் பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குருசாமியை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments