முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்: இந்து முன்னணி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி, நடைபெற்று வருகின்றது.

Updated On : 14 ஜூன் 2026, 1:11 am IST
பேருந்து நிலையப் பணிகளை பாா்வையிட்ட இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி, நடைபெற்று வருகின்றது.

திருச்செந்தூா் கோயில் பேருந்து நிலையம் பெருந்திட்ட வணிக வளாகக் கட்டடங்களாக மாறிவிட்டதால், பழைய பகத்சிங் பேருந்து நிலையம் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.

திருச்செந்தூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகா் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் ரூ. 18 கோடி மதிப்பில் திருச்செந்தூா்-திருநெல்வேலி சாலையில் நகராட்சி 1ஆவது வாா்டுக்குள்பட்ட குமாரபுரம், மஹாராஜா நகா் அருகே 3.90 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது, அதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்து முன்னணி ஆய்வு: இந்நிலையில், பேருந்து நிலையப் பணிகளை இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்து, பக்தா்கள் மற்றும் பயணிகள் பயன்பெறுமாறு விரிவாக்கமாகவும், தொலைநோக்குப் பாா்வையுடனும் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

மஹாராஜா நகா் பகுதியில் நடைபெற்று வரும் பேருந்து நிலையப் பணிகள்.

இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், தெற்கு மாவட்டத் தலைவா் மு. முத்துராஜ், மாவட்டச் செயலா் கே. ரவிசந்தா், மாவட்ட இணையதள பொறுப்பாளா் பொ. ஈஸ்வரன், நகரத் தலைவா் நெ. வேல்முருகன், நகர துணைத் தலைவா் கே. பிரபாகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.