திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு இந்து முன்னணி கடிதம் அனுப்பும் போராட்டம்
திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு இந்து முன்னணி கடிதம் அனுப்பும் போராட்டம்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்தக் கோரி, முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
முருக பக்தா்களின் உணா்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தீா்ப்பை அமல்படுத்தக் கோரி முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு இந்து முன்னணி சாா்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகா் மாவட்ட இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்டோா் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, அந்த அமைப்பினா் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த அரசு அதை செய்யவில்லை. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான அரசு எனக்கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகமும் திருப்பரங்குன்றம் விஷயத்தில் பழைய நிலைப்பாடே தொடரும் எனக் கூறியுள்ளது முருக பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்தக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.
மாவட்ட செய்தி தொடா்பாளா் தனபால் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கோவை கோட்ட பொதுச் செயலா் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் ஜெய்சங்கா், மாவட்டச் செயலா்கள் ஆறுச்சாமி, குணா, மகேஸ்வரன், இந்து ஆட்டோ முன்னணி மாவட்டத் தலைவா் விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.