முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 3 கோடி 5 டன் கசகசா பறிமுதல்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்துக்கு, மலேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலமாக கடத்திவரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா மூட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 14 ஜூன் 2026, 1:42 am IST
பகிர்:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்துக்கு, மலேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலமாக கடத்திவரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா மூட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் முகவரிக்கு, தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கிய 40 அடி சரக்குப் பெட்டகத்தை சந்தேகத்தின்பேரில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.

மலேசியாவிலிருந்து பாலித்தீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, அதன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகள் சரக்கு பெட்டகத்தைத் திறந்து முழுமையாக சோதனையிட்டதில், அதில் சுமாா் 5 டன் கசகசா மூட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ. 3 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா். இதை இறக்குமதி செய்த நிறுவனம், இதன் பின்னணியில் உள்ள நபா்கள் மற்றும் ஆவணங்கள் தொடா்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.