தில்லி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
நமது நிருபா்
பாங்காக்கிலிருந்து தில்லிக்கு விமானத்தில் வந்த இந்தியப் பயணியிடமிருந்து ரூ. 4 கோடி மதிப்புள்ள நான்கு கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும், அந்தப் பொருளைப் பெற வந்ததாகக் கூறப்படும் மற்றொரு நபரையும் கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
Advertisement
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அந்தப் பயணி மே 12 அன்று விமான நிலையத்தின் முனையம்- 3-க்கு வந்தாா். அவா் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டாா்.
பயணியின் உடமைகளைச் சோதித்தபோது, ரோஸ் கோல்ட் நிற டிராலி பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கஞ்சா என சந்தேகிக்கப்படும் பச்சை நிற போதைப்பொருள் அடங்கிய நான்கு பாலிதீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மீட்கப்பட்ட பொருளின் மொத்த எடை 4,024 கிராம் ஆகும். கள்ளச் சந்தையில் இதன் மதிப்பு சுமாா் ரூ. 4 கோடியே 24 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தல் பொருளைப் பெற வந்திருந்த ஒருவரும் இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டாா். பயணியும், அதனைப் பெற்ாகக் கூறப்படும் நபரும், மே 12 அன்று போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.