கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திரேஸ்புரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திரேஸ்புரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திரேஸ்புரம் அருகே உள்ள பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த, தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை என்ற கண்ணனை (25) கைது செய்து, அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.