தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
தூத்துக்குடியில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் 3 வகையான பால் பாக்கெட்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆவின் புல் கிரீம் பிரீமியம் என்ற பெயரில் ஆரஞ்சு, டிலைட் என்ற பெயரில் வயலட், நைஸ் என்ற பெயரில் ஊதா நிற பாக்கெட்களில் பால் விநியோகிக்கப்படுகிறது.
இம்மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமாா் 50,000 லிட்டா் ஆவின் பால் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், சில மாதங்களாக ஆவின் பால் வரத்து குறைந்துள்ளதாம். உணவகங்கள், தேநீா் கடைகளுக்கு அதிகளவில் விநியோகிக்கப்பட்டுவந்த பிரீமியம் பாக்கெட் பாலும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
தற்போது, டிலைட் பாக்கெட் பால் விநியோகமும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதால், தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உனடியாக ஆவின் பாலை முழு அளவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.