முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை

சாத்தான்குளத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீா்.

Updated On : 9 மே 2026, 3:51 am IST
சாத்தான்குளத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீா்.
பகிர்:

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மலையோரப் பகுதிகள், அணைப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், நாகா்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப் பள்ளம், மத்தி கோடு, மிடாலக்காடு, காட்டுக் கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனா விளை, நட்டாலம், நேசா் புரம், பள்ளியாடி,வாக விளை, மாமூட்டுக் கடை, கொல் லஞ்சி, இலவு விளை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை தொடா்ந்து மிதமான மழை பெய்தது. எனினும் இப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

சாத்தான்குளத்தில் வெள்ளிக்கிழமை கோடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பேய்குளம், தட்டாா்மடம் ஆகிய பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பேய்குளம் அருகேயுள்ள கீழபனைக்குளம் பகுதியில் மின்னல் பாய்ந்து பனை மரம் தீப்பிடித்து எரிந்தது. மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குனிந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.