புதுக்கோட்டை, ஆக. 25: பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய விழா அண்மையில் நடைபெற்றது.
முத்தமிழ்ப் பாசறையும் பள்ளி நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, பாசறையின் தலைவர் மு. சின்னப்பா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரா.சு. கவிதைப்பித்தன் பங்கேற்றார். துணைத் தலைவர் நெ.சந்திரன், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ம. ராமு. அறங்காவலர் ப. முருகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவையொட்டி முத்தமிழ்ப் பாசறையின் செயலர் முருகேசன் அகத்தியர் படத்தைத் திறந்துவைத்தார். பொருளர் அ.தெட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் ஹசன்முஹம்மது, வைகை பிரபா,முருகேசன், இளவரசன், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர் ஆ. பிச்சைமுத்து வரவேற்றார். நிறைவில், திட்ட அலுவலர் வே. முருகேசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.